தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகில் உள்ள மாநகராட்சி மாநாட்டு மையம் வளாக அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மணிமேகலை விருது மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மைய வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டு துணை முதல்வர் தொடங்கி வைத்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகள் மற்றும் வங்கி கடன் இணைப்புகளை வழங்கி சிறப்பு செய்தார்கள்.

நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மல்லிகா, மற்றும் அரசு அதிகாரிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் கவுன்சிலர்கள், திமுக கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.