தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில், சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தாளமுத்துநகர் காவல் நிலையம் சார்பாக பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் கனகரத்தினமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தாளமுத்துநகர் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்துராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் – இந்திய ஒற்றுமையின் அடையாளம்” என்ற தலைப்பில் உற்சாகமாகப் பேசி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு பள்ளியில் பேச்சுப்போட்டி – வெற்றியாளர்களுக்கு காவல் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு தனி ரேஷன் கடை அமைக்க கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம்!!
அடுத்த
தமிழ்நாடு நாளை சிறப்பாகக் கொண்டாடிய நாம் தமிழர் கட்சி – ஓட்டப்பிடாரம் தொகுதி!!
இதையும் படிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் முன்னேற்றத்திற்கு புதிய முயற்சி – தூத்துக்குடியில் ஆவின் பாலகம்–Friends Coffee Cafe-ஐ திறந்து வைத்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!!
13 Jul 2026
நட்பும் கல்வியும் சமூக முன்னேற்றத்தின் தூண்கள் – தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வில் வலியுறுத்தல்!!
13 Jul 2026
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளையின் கரம் நீட்டிய உதவி தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்!!
13 Jul 2026
தனசேகர் நகரில் மதுபானக் கடையால் பொதுமக்கள் அச்சம் – நடவடிக்கை இல்லை என்றால் காங்கிரஸ் தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம்: சகாயராஜ், பெருமாள்சாமி எச்சரிக்கை!!
13 Jul 2026