தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில், சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தாளமுத்துநகர் காவல் நிலையம் சார்பாக பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் கனகரத்தினமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தாளமுத்துநகர் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்துராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

பேச்சுப் போட்டியில் மாணவர்கள் “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் – இந்திய ஒற்றுமையின் அடையாளம்” என்ற தலைப்பில் உற்சாகமாகப் பேசி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.