தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம் பகுதியில் அமைக்கப்பட உள்ள புதிய தார்சாலை மற்றும் வடிகால் பணிகள் நடைபெறவுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பெருமாள்புரம் பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையமும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுகளில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா IAS, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், வட்ட கழக செயலாளர் கதிரேசன், மண்டல தலைவர் கலைசெல்வி, வட்ட கழக பிரதிநிதி துரை உள்ளிட்டோர் இணைந்து சென்றனர்.

மேலும், தூத்துக்குடி மாநகர மக்களின் கோரிக்கையை தொடர்ந்து ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தை (Archery) விளையாட்டுகளுக்கான பிரத்தியேக மைதானம் அமைக்க வேண்டிய இடங்களையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.