தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2025–2026 கல்வியாண்டுக்கான பள்ளி மாணவ–மாணவிகளுக்கான மிதிவண்டி வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத் துறைகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், காரப்பேட்டை நாடார் மகமை நிர்வாகிகள் நடராஜன், விநாயகமூர்த்தி, மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மொத்தம் 318 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.