தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்புத் திட்டம் 2025–2026 திட்டத்தின் கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய மினி ஜவுளி பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (28.11.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
முப்புலிவெட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் இந்த மினி ஜவுளி பூங்கா ஒரு புதிய முன்னேற்ற அத்தியாயமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிக்கு புதிய மைல்கல் – முப்புலிவெட்டியில் ரூ.75 லட்சத்தில் மினி ஜவுளி பூங்கா அடிக்கல்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பொதுப்பிரச்சினைகளை தீவிரமாக முன்வைத்த அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி!!
அடுத்த
கோவில்பட்டியில் ‘புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக்’ விழாவை தொடங்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026