ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தேசிய புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக்’ விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.

விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் க. சண்முகசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா, கல்லூரி இயக்குநர் சே. சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.