தூத்துக்குடி மக்கள் நல உரிமை அமைப்பாளர் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், தான் பயின்ற துளசி சட்டக் கல்லூரி முதல்வர் அவர்களின் பொற்கரங்களால் ஆசி பெறும் பெருமித தருணத்தை இன்று பகிர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, துளசி சட்டக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்தார். இந்த சந்திப்பில், சட்டக் கல்லூரி முதல்வர் எழுதிய நூலின் முதல் பிரதியை மகளிர் அதிகாரப்படுத்தல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான ஆதரவாக வழங்கப்பட்டது.

சந்திப்பின் போது, தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடனான மனுவை வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரடியாக கனிமொழி எம்பிக்கு வழங்கினார்.

மக்கள் நலத்திற்கான தனது சட்டப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.