தூத்துக்குடி மாவட்டம் கூட்டுடன்காடு ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

சமூக நலன், கலாச்சார நிகழ்ச்சிகள், பெண்கள் சுயசார்பு கூட்டங்கள், இளைஞர் சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொதுநல நிகழ்ச்சிகளுக்கான முக்கிய மையமாக அமையும் வகையில் இந்த நலக்கூடம் புதுமையான வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சியின் மக்கள் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த இந்த நலக்கூடம் நிறைவேறியுள்ளதால், பொதுமக்கள் பெருமகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கூட்டுடன்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கு பலனளிக்கும் இந்த சமுதாய நலக்கூடம் வரும்நாட்களில் பல்வேறு அரசு மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளுக்கான மையமாகத் திகழும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.