ஞாயிற்றுக்கிழமை (15.06.2025) நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை திருச்செந்தூரில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மடத்தில் வைத்து ஆறுமுகநேரி முதல் அய்யனார்புரம் வரை உள்ள 28 தேவேந்திர குல வேளாளர் சமுதாய கிராம ஊர் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், மற்றும் பெரியோர்கள், ஆலோசகர்கள், இளைஞர்கள், அனைவரும் ஒன்று கூடி 28 கிராமத்திற்கும் சொந்தமான சமுதாய மடத்தை நிர்வாகம் செய்வதற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள்.

தலைவராக கோமஸ்புரம் கிராமத்தைச் சார்ந்த அம்பாசங்கர், துணை தலைவராக முத்தையாபுரம் தெற்கு தெருவை சார்ந்த மா. மாரிசெல்வம், செயலாளராக கீழ அழகாபுரி கிராமத்தைச் சார்ந்த தேவேந்திரன், துணை செயலாளராக மேல அழகாபுரியை சேர்ந்த ஸ்டாலின், பொருளாளராக கீழ அலங்கார தட்டு ஊரைச் சார்ந்த ஜான், ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்வு செய்யப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகளுக்கு 28 கிராமத்தைச் சார்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என உறுதி அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து செல்வம் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் மடத்தின் முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.