ஞாயிற்றுக்கிழமை (15.06.2025) நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை திருச்செந்தூரில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மடத்தில் வைத்து ஆறுமுகநேரி முதல் அய்யனார்புரம் வரை உள்ள 28 தேவேந்திர குல வேளாளர் சமுதாய கிராம ஊர் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், மற்றும் பெரியோர்கள், ஆலோசகர்கள், இளைஞர்கள், அனைவரும் ஒன்று கூடி 28 கிராமத்திற்கும் சொந்தமான சமுதாய மடத்தை நிர்வாகம் செய்வதற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள்.
தலைவராக கோமஸ்புரம் கிராமத்தைச் சார்ந்த அம்பாசங்கர், துணை தலைவராக முத்தையாபுரம் தெற்கு தெருவை சார்ந்த மா. மாரிசெல்வம், செயலாளராக கீழ அழகாபுரி கிராமத்தைச் சார்ந்த தேவேந்திரன், துணை செயலாளராக மேல அழகாபுரியை சேர்ந்த ஸ்டாலின், பொருளாளராக கீழ அலங்கார தட்டு ஊரைச் சார்ந்த ஜான், ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்வு செய்யப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகளுக்கு 28 கிராமத்தைச் சார்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என உறுதி அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து செல்வம் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் மடத்தின் முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மடத்தை நிர்வகிக்க புதிய நிர்வாகிகள் தேர்வு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் புதிய விரிவான மினிபஸ் பேருந்து சேவையை கனிமொழி கருணாநிதி எம்.பி., கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடியில் மின்சாரம் இன்றி 2 நாட்களாக பொதுமக்கள் அவதி - விரைந்து நடவடிக்கை எடுக்க கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026