தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மேயர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலக அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார்.

பின்னர் தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட அத்திமரப்பட்டி ரோடு முத்தையா புரம் சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பொது கிளை நூலகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

உடன் துணை ஆணையர் சரவணகுமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், முத்து வேல், மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகரன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.