ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சாமிநத்தம் ஊராட்சி சாமிநத்தம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்குத் தெருவில் ரூ. 4.99 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஒன்றிய பொறியாளர் காயத்ரி, மேற்பார்வையாளர் கலை அழகன், வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்கபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, ஒப்பந்தகாரர்கள் சுரேஷ், ஜெயக்குமார் ஊராட்சி செயலர் அருண், கிளைக்கழக செயலாளர் பாலமுருகன், மகளிரணி சுமிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.