தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மாப்பிளையூரணி ஊராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட மழைநீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆரோக்கியபுரம் தொழுநோய் மருத்துவமனையில் தேங்கியிருந்த மழைநீரை JCB மூலம் அகற்றும் பணிகளை அவர் பார்வையிட்டு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பாண்டியபுரம் பகுதிகளில் மின் மோட்டார் உதவியுடன் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளையும், அ.சண்முகபுரம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கியிருந்த இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில், உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விரைவான நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.