தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மாப்பிளையூரணி ஊராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட மழைநீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆரோக்கியபுரம் தொழுநோய் மருத்துவமனையில் தேங்கியிருந்த மழைநீரை JCB மூலம் அகற்றும் பணிகளை அவர் பார்வையிட்டு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பாண்டியபுரம் பகுதிகளில் மின் மோட்டார் உதவியுடன் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளையும், அ.சண்முகபுரம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கியிருந்த இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில், உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விரைவான நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.ஆர். கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாப்பிளையூரணி ஊராட்சியில் மழைநீர் பிரச்சினை தீர்க்க MLA சண்முகையா அதிரடி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு: தூத்துக்குடியில் உயர்கல்விக்கான கல்விக்கடன் முகாம் – மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பு!!
அடுத்த
“கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடை வழங்கி ஊக்கமளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026