தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் புதியம்புத்தூரைச் சேர்ந்த லவ்லி பிரன்ட்ஸ் கிரிக்கெட் அணிக்கு, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா அவர்களின் ஏற்பாட்டில், தூத்துக்குடி கணேஷ்நகர் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.

நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
“விளையாட்டு என்பது இளமைப் பருவத்தின் அவசியமான ஒன்று. பல இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான போட்டிகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட்டுக்கு அதிக ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த அணிக்கு சீருடை வழங்கும் பணியை முன்னெடுத்த ஒன்றிய செயலாளர் இளையராஜா பாராட்டப்பட வேண்டியவர்,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் விளையாட்டு துறையை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் விளைவாக மாநில, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் வீரர்கள் தொடர்ச்சியாக சாதனைகள் படைத்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடும் அனைத்து வீரர்களையும் மனதார பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாநில வணிக அணி இணை செயலாளர் உமாபிரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர் இளையராஜா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், முன்னாள் தலைவர் செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.