தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி தொடர விரும்பும் பொருளாதாரத்தால் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவியாக, மாவட்ட நிர்வாகம் வங்கியாளர்களுடன் இணைந்து சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்துகிறது. இது வரும் 28.11.2025 காலை 10.00 மணிக்கு சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

2024–2025 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்விப் பிரிவுகளில் இந்த ஆண்டு சேர்ந்து உள்ள மாணவர்கள், மேலும் ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

கல்விக்கடன் பெற மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

பான் கார்டு

ஆதார் அட்டை

வங்கி பாஸ் புக்

சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

10ம், +1, +2 மதிப்பெண் பட்டியல்

மாற்றுச் சான்றிதழ்

சாதி சான்றிதழ்

முதல் பட்டதாரி சான்றிதழ் (தேவையுள்ளவர்களுக்கு)

உறுதிமொழி (Bonafide) சான்றிதழ்

கல்லூரி கட்டண விவரங்கள் மற்றும் கட்டண ரசீதுகள்

இணை விண்ணப்பதாரர்களாக வருகிற பெற்றோர் கொண்டு வர வேண்டியவை:

பான் கார்டு

ஆதார் அட்டை

புகைப்படம்

வங்கி கணக்கு பாஸ் புக்

வருமானச் சான்றிதழ்

மேலும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ இணையதளத்தின் மூலம் கல்விக்கடனுக்காக முன்பதிவு செய்யலாம்.

மத்திய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு இந்த கல்விக்கடனின் மூலம் உதவியை பெறலாம்.

மாணவர்களின் உயர்கல்விக்கான தடைகளை நீக்குவதில் இந்த முகாம் மிகப்பெரும் பங்காற்றும் என ஆட்சியர் க.இளம்பகவத் இ.ஆ.ப தெரிவித்தார்.