தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி, முள்ளக்காடு பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்பாக விவசாய நிலங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும் வகையில் உப்பாத்து ஓடை உள்ளிட்ட வடிகால் பகுதிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகள் தெரிவித்த பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், தற்போது கழிவுநீர் ஓடைகள் ஆழம் குறைந்திருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக கூறினர். மேலும், கழிவுநீர் ஓடைகளில் உள்ள கற்களை அகற்றி, ஆழமாக தோண்டினால்தான் தண்ணீர் சீராக கடலுக்குச் செல்லும் என்றும் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக இரண்டு ஜேசிபிகளை பயன்படுத்தி வடிகால் தோண்டுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். மேலும், மழை தொடங்கும் முன்னரே பணிகளை துவங்கி விரைவாக முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பொறியாளர் தமிழ்செல்வன், அத்திமரப்பட்டி விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத்தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராசு, பொருளாளர் சின்னக்குட்டி தானியேல், வேளாண்மை இயக்குநர் பொியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் செல்வக்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அத்திமரப்பட்டி – முள்ளக்காடு பகுதியில் மழைக்கு முன் வடிகால் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உத்தரவு : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பா.ஜ.க முன்னணி தலைவர் H.ராஜாவை சந்தித்தார் எழுத்தாளர் பெ.செந்தில்குமார்!!
அடுத்த
கட்டுமானப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்க வேண்டும் – நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026