தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி, முள்ளக்காடு பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்பாக விவசாய நிலங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும் வகையில் உப்பாத்து ஓடை உள்ளிட்ட வடிகால் பகுதிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகள் தெரிவித்த பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், தற்போது கழிவுநீர் ஓடைகள் ஆழம் குறைந்திருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக கூறினர். மேலும், கழிவுநீர் ஓடைகளில் உள்ள கற்களை அகற்றி, ஆழமாக தோண்டினால்தான் தண்ணீர் சீராக கடலுக்குச் செல்லும் என்றும் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக இரண்டு ஜேசிபிகளை பயன்படுத்தி வடிகால் தோண்டுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். மேலும், மழை தொடங்கும் முன்னரே பணிகளை துவங்கி விரைவாக முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பொறியாளர் தமிழ்செல்வன், அத்திமரப்பட்டி விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத்தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராசு, பொருளாளர் சின்னக்குட்டி தானியேல், வேளாண்மை இயக்குநர் பொியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் செல்வக்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.