தூத்துக்குடி மாநகரத்தின் காந்திநகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் காந்திநகர் தொடக்கப் பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி அவர்களுடன் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின்போது, பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, வகுப்பறை பழுது பார்க்கும் பணிகள், பாதுகாப்பு சுவர், விளையாட்டு மைதான வசதி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்றது.
பள்ளியில் உடனடி திருத்தப் பணிகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் அறிவுறுத்தியதுடன், மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயிலும் சூழலை உருவாக்க அரசு தேவையான படிகளை எடுத்து வரும் என்பதை தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர் டென்சிங் உள்ளிட்டோர் உடன் சேர்ந்தனர்.
தூத்துக்குடி
மந்திரி கீதா ஜீவன் ஆய்வு: காந்திநகர் தொடக்கப்பள்ளிக்கு விரைவில் அடிப்படை வசதி மேம்பாடு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சாலையில் மாடு மோதியதில் பைக் சறுக்கி விழுந்து பால் வியாபாரி உயிரிழப்பு!!
அடுத்த
பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026