சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69ஆம் நினைவு தினம் தூத்துக்குடியில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையேற்றார். மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் மாசாணம் வாரியார் சிவராமன், ராஜேஷ், மண்டல் தலைவர்கள் லிங்கசெல்வம், மாதவன், ராஜேஷ் கனி, சுதா, கிழக்கு மண்டல் பிரபாரி சத்தியசீலன், மருத்துவர் அணி மாநில செயலாளர் அரவிந்த், சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, மற்றும் அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் வெள்ளதாய், சின்ன தங்கம், வெங்கடேஷ், செந்தில், சங்கர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை படடியல் அணி மாவட்ட தலைவர் பெரியசாமி ஏற்பாடு செய்திருந்தார்.

பேச்சாற்றிய தலைவர்கள் அண்ணல் அம்பேத்கரின் வரலாற்றுப் பொக்கிஷமான மேற்கோள்களை நினைவு கூர்ந்தனர். “நீங்கள் கல்வி கற்றால் உலகம் உங்களை மதிக்கும்,”
“சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் — இதுவே ஜனநாயகத்தின் உயிர்க்கொத்து,” “தன்னை உயர்த்திக் கொள்ளும் திறன் ஒவ்வொருவரிலும் உள்ளது,” என்ற அம்பேத்கரின் முக்கியக் கருத்துகளை வலியுறுத்தினர்.

அவரது சமூக நீதி, கல்வி சக்தி, வாய்ப்புச் சமத்துவம் ஆகிய கொள்கைகள் இந்திய முன்னேற்றத்தின் அடித்தளமாக தொடர்கின்றன என்றும், “நாடு முன்னேற சமூகமே முன்னேற வேண்டும்” என்ற சிந்தனை இன்றும் பொருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அம்பேத்கரின் கொள்கைகளை இளைஞர்களிடம் பரப்புதல், பின்தங்கியோருக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்குதல், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகிய செயல்களே அவருக்கு ஆற்றும் உண்மையான மரியாதை என நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.