சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாநிலத் தலைவர் அளவிலான விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ். எம். ஷியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நலத்திட்ட உதவிகள் பல்வேறு பிரிவினருக்குச் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பெருமளவில் பயனாளிகள் கலந்துகொண்டனர்.