தூத்துக்குடி அருகே சாலையில் மாடு திடீரென குறுக்கே வந்ததால் ஏற்பட்ட பைக் விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தது பகுதி மக்களை பெரும்பரிதாபத்தில் ஆழ்த்தியுள்ளது.
அண்ணா நகர் 8வது தெருவைச் சேர்ந்த பூபாலின் மகன் சேகர் (58), பால் வியாபாரம் செய்து வந்தவர். கடந்த 29ஆம் தேதி இரவு 9 மணியளவில் மீளவிட்டான் பகுதியை அண்டிய பண்டாரம்பட்டி – சில்வர்புரம் சாலையில் பைக்கில் பயணம் செய்து வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே மாடு ஓடிவந்தது. இதனால் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
தலையும் உடலும் பலத்த காயம் அடைந்த சேகரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும், நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
இந்த விபத்து குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சாலையில் சுதந்திரமாக சுற்றும் மாடுகள் குறித்து மீண்டும் ஒருமுறை பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சாலையில் மாடு மோதியதில் பைக் சறுக்கி விழுந்து பால் வியாபாரி உயிரிழப்பு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடி வளர்ச்சி... கோப்புகளிலிருந்து களத்துக்கு நகரும் திட்டக் கூட்டம்!”
அடுத்த
மந்திரி கீதா ஜீவன் ஆய்வு: காந்திநகர் தொடக்கப்பள்ளிக்கு விரைவில் அடிப்படை வசதி மேம்பாடு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026