தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி புஷ்பா நகர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கியிருந்த மழைநீர் நிலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக தீயணைப்பு துறையின் உதவியுடன் மழைநீர் வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அவ்வழியாக நீர்த்தேக்கம் அகற்றப்பட்டு, மக்கள் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பகுதியில் உள்ள முக்கியச் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் ஆகிய அனைத்திலும் ஏற்பட்டிருந்த நீர்த்தேக்கம் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் நேரடியாக அறிவுரைகள் வழங்கி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளும்படி கட்டளையிட்டார்.

மழை காரணமாக மக்கள் எவ்வித சிரமமும் அனுபவிக்க வேண்டாம் என்பதை உறுதி செய்வதே தமது முதன்மைக் கடமை என அமைச்சர் தெரிவித்தார்.