தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முத்தையாபுரம் பகுதியில் உள்ள பொன்னாண்டி நகர் பகுதியில் மழை நீர் தேங்கி இருந்த இடங்களுக்கு இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

பகுதிவாசிகளின் தேவைகள் மற்றும் இடர்களை கேட்டறிந்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகளை வழங்கினார். மழைநீர் விரைவாக வெளியேற தடையுள்ள பகுதிகளைச் சீரமைத்தல், கூடுதல் மோட்டார் பம்புகள் மூலம் நீர் வடிகட்டி வெளியேற்றுதல் போன்ற பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பொன்னாண்டி நகரில் நீடித்த நீர்தேக்கம் காரணமாக ஏற்பட்ட சிரமங்களை தீர்க்க அரசின் சார்பில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.