“ஆதாரங்கள் முக்கியம்… அலட்சியம் வேண்டாம்… எளிதான செயல்களைச் செய்யவே ஏனோ கடினம்…” என சமூக பொறுப்புணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றியுள்ளார் கலையும் கல்வியும் சார்ந்த விழிப்புணர்வு பேச்சாளர் டாக்டர் சகா.
இன்று (28.11.2025) அவர் தொடர்ந்து பேசுகையில், தங்களுடைய ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து ஒரு புத்தகமாக தொகுத்து வைத்துக்கொள்வது குடும்பத்திற்கும் நபருக்கும் மிகப் பெரிய பாதுகாப்பு எனவும் வலியுறுத்தினார்.
“ஒரு சின்ன அலட்சியம் சில நேரங்களில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எந்த ஆவணத்தையும் தேவைப்படும் நேரத்தில் உடனடியாக காணாமல் தவிக்கும் பிரச்சினைகள் அதிகம். அதனால் அடிப்படை ஆவணங்களை ஒழுங்காக ஒரு கோப்பிலோ புத்தகமாகவோ வைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், “செயல் எளிது… பழக்கம் எளிதல்ல. ஆனால் ஒழுங்கைப் பின்பற்றத் தொடங்கினால் வாழ்க்கை எளிதாகிவிடும்” என்று கூறி, ஒழுங்கும் ஆதாரமும் தனிநபர் முன்னேற்றத்திற்கான அடிப்படைக் கல்லென அவர் விளக்கினார்.
தூத்துக்குடி
“ஆதாரத்தின் அவசியம் – முக்கிய ஆவணங்களை தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் சகா வலியுறுத்தல்”
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பி & டி காலனி 15-வது தெருவில் மழைநீர் பாதிப்புகள் – அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் மழைநீர் நிலைமையை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026