பத்ம ஶ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 89-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி. மார்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மதிமுக நிர்வாகிகள் தொம்மை, முருகேசன், செந்தாமரை கண்ணன், சுந்தர்ராஜ், காசிராஜன், பொய்யாமொழி, சரவணப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.