ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைக்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் பொதுசுகாதாரம் தொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் மாப்பிள்ளையூரணி பத்ரகாளியம்மன் கலையரங்க மண்டபத்தில் எம்.சி.சண்முகையா தலைமையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க, பழுதான தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்ய, குறைந்த மின்னழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படாமல் கண்காணிக்க, தெருக்களில் குப்பைகள் முறையாக அகற்றப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க துறைசார்ந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் ராஜா, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் மகேஷ், ஜாஸ்மின், மின்வாரிய உதவி பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் வில்சன், ஊராட்சி செயலர் ஜெயரத்தினம் மற்றும் ஊராட்சி தூய்மை காவலர்கள் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.