ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தருவைகுளத்தில் இருந்து வேப்பலோடை செல்லும் சாலையின் மேல்புறம், தருவைகுளம் ஊரணிக்கு வரத்து நீர் ஓடும் பகுதியில் வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, நில அளவையர் தங்கதுரை, தருவைகுளம் சூசையப்பர் சபை தலைவர் அந்தோணி ராஜ், பொருளாளர் பால்ராஜ், கென்னடி, கிளைக் கழகச் செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், பிரஸ்நேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.