ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து 1 கோடி 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டோ ரூபன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளைச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.