தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கிய நிலையில், அதனை விரைந்து வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோன்று, கதிர்வேல் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இப்பணிகள் முடிவடையும் போது, அந்தப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் விரைவாக வெளியேறக்கூடிய நிலை உருவாகும் என அவர் தெரிவித்தார்.

மக்கள் சிரமங்களை தீர்க்க அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேயர் கூறினார்.