தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளர் வான்மதி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ஜான் சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் கழக நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் ஏற்படும் வகையில் சீரமைப்பு பணிகள் தரமான முறையில் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.