தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாகச் செல்ல தேவையான அளவு ஆழம் தண்ணீர் வழிகளில் உருவாகும் நோக்கில் கடற்கரையில் நடைபெற்று வரும் ஆழப்படுத்தும் (Sea Trenching) பணிகளின் போது எடுக்கப்பட்ட மணலை அகற்றித் தர வேண்டும் என மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, மணல் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரேஸ்புரம் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த பணிகள் நடைபெறும் நிலையை, மீனவர்கள் குறைதீர் பெறும் வகையில் உடனடி நடவடிக்கையாக கண்காணித்து வருவதாக மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் பங்குத் தந்தையர்கள், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெறும் மணல் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிளையூரணியில் மழைநீர் தீர்க்கும் பணிகள் தீவிரம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு!!
அடுத்த
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் கவுன்சிலர் ரெங்கசாமியின் சிறப்பு வாழ்த்து – முன்னணி நாளிதழில் பெரும் வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
sample
09 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026