தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர் பகுதியில் புதிய நூலக கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி.

அவருடன் மாநகர துணை செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட தொமுச தலைவர் பேச்சிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.

மக்களுக்கு கல்வி மற்றும் அறிவுத் திறனை வளர்க்கும் நோக்கில் அமைக்கப்படும் இந்த நூலகம், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.