தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பிரதான சாலைகள், சந்திப்புகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உயரம் குறைவான உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு மற்றும் திரேஸ்புரம் பகுதிகளில் அமைக்கப்பட உள்ள மின் கோபுர விளக்குகளுக்கான இடங்களை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இணைந்து கலந்து கொண்டனர்.

மேயர் அவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், சாலைகள் பிரகாசமாகவும் இருந்து, இரவு நேர போக்குவரத்து சிரமம் இல்லாமல் நடைபெறும்வகையில் இந்த மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படுவதாகவும், விரைவில் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.