திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (27.11.2025) தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பல்வேறு சமூகநல நிகழ்வுகள் நடைபெற்றன.

காலை 9.00 மணிக்கு பழைய அண்ணா பேருந்து நிலையம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் கேக் வெட்டும் விழா நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி, பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து விழாவை கொண்டாடினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பல்வேறு சேவை நிறுவனங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் சிறப்பு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

1. செவித்திறன் மாற்றுத்திறனாளி பள்ளி – பிரையண்ட் நகர் 3வது தெரு

2. நேசக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லம் – பிரையண்ட் நகர் 1வது தெரு

3. பாசகரங்கள் முதியோர் இல்லம் – சிதம்பர நகர்

4. பிளசிங் முதியோர் இல்லம் – பி & டி காலனி

5. பத்திரப்பதிவு அலுவலகம் அருகிலுள்ள முதியோர் இல்லம்

6. நியூ பாசகரங்கள் – பால்பாண்டி நகர்

மாலை 4.30 மணிக்கு சமூகநல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட, மாநகர், பகுதி, வட்ட நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமென தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.