விழாக்களில் தயாரிக்கப்படும் உணவு பெருமளவில் வீணாகும் நிலை தொடர்ந்து காணப்படும் நிலையில், “சிறு செயல் பெரிய மாற்றம்” என்ற கோஷத்துடன் கலையும் கல்வியும் அமைப்பின் சார்பில் Dr. சகா ஒரு முக்கியமான விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டார்.

சடங்கு நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவு ஏராளமான தேவையான மக்களுக்குச் செல்லாமல் வீணாகிறது என்பதை காட்டும் வகையில் அவர்,

“உணவை வீண் செய்யாதீர்கள்.
வீணாகப் போகும் என்று தெரிந்த பின்பும் உதவி செய்வதற்குப் பதிலாக, அது வீணாகாமல் பார்த்துக்கொள்வதே உண்மையான சமூகப் பணியாகும்”
என்று வலியுறுத்தினார்.

அதிகப்படியான உணவு தயாரிப்பு, சரியான பகிர்வு திட்டமின்மை, மற்றும் விழாக்களில் காணப்படும் அலட்சியம் போன்றவை உணவு வீணாவதற்கான காரணங்களாக இருப்பதாக அவர் கூறினார். இதைத் தவிர்க்க, நிகழ்ச்சிகளுக்கு முன் சரியான திட்டமிடல், மீதமான உணவை உடனடியாக தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்கும் குழுக்கள் அமைத்தல் போன்ற நடைமுறைகளை சமூகமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கலையும் கல்வியும் அமைப்பு தொடர்ந்து பொதுநலத்திற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளை செய்து வருவதை குறிப்பிடத்தக்கது. “சிறு செயலே பெரிய மாற்றத்தை உருவாக்கும்” என Dr. சகா தெரிவித்துள்ளார்.