தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாமன்றத்தில் ஆறுமுகம் நியமன உறுப்பினராக பதவி ஏற்றார். இதனை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, நகரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார். லெவஞ்சிபுரம் மற்றும் சிவந்தாகுளம் பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதையடுத்து, மேயர் நேரில் சென்று கண்காணிப்பு மேற்கொண்டார்.

சிவந்தாகுளம் பகுதியில் புதிய சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அந்த இடங்களிலும் ஆய்வு நடை பெற்றது.

இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர். பணிகள் விரைவாக முடிவடைந்து பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி தெரிவித்தார்.