தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் சம்மந்தமான குறைகளை சரி செய்ய கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து இன்று (25.03.2025) நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் பி.இ அவர்களிடம் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்ததாவது :-
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் உள்ள மாதவன் நகர் மேற்கு பகுதியில் 1 வருடமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை உள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்கள் விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பலமுறை பொதுமக்கள் தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை, ஆகவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக குறைந்த மின் அழுத்தம் சம்மந்தமான குறைகளை சரிசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவின் போது மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப் பெருமாள், அய்யனடைப்பு பகுதி லியோன் சம்பத் குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
குறைந்த மின் அழுத்தம் நடவடிக்கை எடுக்க கோரி மதிமுக கோரிக்கை மனு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026