தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் சம்மந்தமான குறைகளை சரி செய்ய கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து இன்று (25.03.2025) நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் பி.இ அவர்களிடம் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்ததாவது :-

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் உள்ள மாதவன் நகர் மேற்கு பகுதியில் 1 வருடமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை உள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்கள் விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

பலமுறை பொதுமக்கள் தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை, ஆகவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக குறைந்த மின் அழுத்தம் சம்மந்தமான குறைகளை சரிசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவின் போது மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணப் பெருமாள், அய்யனடைப்பு  பகுதி லியோன் சம்பத் குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.