தூத்துக்குடியில் இன்று (08.04.2025) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

மனுவின் போது மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.