தூத்துக்குடியில் உள்ள தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளரை சந்தித்தார்.

மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :-

தூத்துக்குடி மாவட்ட அலுவலராக பதவி ஏற்றி உள்ளேன். தூத்துக்குடி மாவட்டம் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி, கெமிக்கல்கள் தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளது. மிகப்பெரிய கப்பல் துறைமுகம் உள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள் இயங்கி கொண்டு வருகிறது.

ஓட்டப்பிடாரத்தில் புதிதாக ரூ. 2.45 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் அமைச்சர்களின் முயற்ச்சியில் ஏரல் பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு இடம் ஓதுக்கீடுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

உடன்குடியில் தமிழக அரசால் துவங்கப்பட இருக்கின்ற 1300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் அருகிலும் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உடன்குடியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கு கோரிக்கை வைத்த நிலையில் இயக்குனரின் அனுமதி கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு நிலையங்களில் 53 தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

முதல்வரின் அனுமதியோடு மூன்று மாதங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமையப்பட இருக்கிறது. தூத்துக்குடியில் 233 தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் உள்ளனர். கோடைகாலம் என்பதால் அதிக தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். விபத்துகள் ஏற்படும் போது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெயில் காலம் என்பதால் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரம் சம்மந்தமான எலக்ட்ரிக்கல் பொருட்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, போன்றவைகளை பழுது நீக்கி சரியான முறையில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் குப்பைகளை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். புகை பழக்கம் உள்ள நபர்கள் புகை பிடித்தவுடன் அவற்றை பொது இடங்களில் வீசுவதை தவிர்க்கவேண்டும்.

ஏதேனும் தீ விபத்து மற்றும் பிற விபத்துகள் ஏற்பட்டால் பொதுமக்கள் 101, 112 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். விபத்துகள் தடுப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.