ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில், பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு துணைபோகும் அமெரிக்காவின் கொள்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அஸ்கர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன், வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. எஸ். அப்துல் ரகுமான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் முஹம்மது ஜமீல் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பாலஸ்தீன மக்களுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தியும், இஸ்ரேல் – அமெரிக்காவின் கொடூரத்தை வன்மையாக கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.