மகாகவி பாரதியாரின் 144வது பிறந்த நாளை ஒட்டி, தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சிக் கல்லூரியில் நூலகக் குழு, வாசகர் வட்டம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணிமன்றம் இணைந்து நடத்திய பேச்சுப் போட்டி இன்று நடைபெற்றது. ‘கவியும் காவலரும் பாரதியார்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் பதினாறு மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி ஜெஸி பெர்னாண்டோ, பெண்கள் விடுதலை குறித்து பாரதி எழுதிய கவிதைகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டினார்.

சிறப்புரையாற்றிய தூத்துக்குடி வானொலி நிலைய மேனாள் நிகழ்ச்சி தலைவர் முனைவர் எம். ராதாகிருஷ்ணன், “இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் பாரதி” என்று கூறினார். நன்றி உரையாற்றிய புத்தக வாசிப்பு நற்பணிமன்ற தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து, மாணவிகளின் ஆக்கப்பூர்வ பங்களிப்பை பாராட்டினார்.

நிகழ்ச்சியில் முனைவர்கள் வினிதா, பிரியங்கா, அந்தோணி, மெல்பா சரணோன், விஜயலட்சுமி, எலிசபெத் ரெஜினா, ஜேம்ஸ் அந்தோணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, செல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.