ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மு. புதுக்கிராமம் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பழனிச்சாமி வட்ட வழங்கல் அலுவலர் சகிலா, ஒன்றிய பொறியாளர் தளவாய், மாரியப்பன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு, பக்கபட்டி சுரேஷ், கிளைக் கழக செயலாளர் முருகன், அயலக அணி சஞ்சய் மாணவரணி கணேசன், ஒப்பந்தகாரர் குமார் மாணவரணி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.