தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதிபராசக்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (25.11.25) நேரில் பார்வையிட்டார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
மேலும், மாவட்ட தொழில் மையம் அருகிலுள்ள செங்குளம் ஓடை வழியாக மழைநீர் சீராகப் பாயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் குழுவினர் நேரில் கண்காணித்தனர். ஆய்வின்போது தூத்துக்குடி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கனமழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் உடனடி நிவாரணம் பெறுவதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிபுரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப் பணிகளை கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்பி கனிமொழி கருணாநிதி ஆய்வு – ஆதிபராசக்தி நகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகம்!!
அடுத்த
G. V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைவு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026