தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

வாதலக்கரை அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருளாண்டி, அதிமுக முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், அமமுக வாதலக்கரை ஊராட்சி செயலாளர் K. M. கருப்பாசாமி, அமமுக இடைச்சியூரணி கிளைச் செயலாளர் செல்லப்பாண்டியன், பாஜக கண்ணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G. V. மார்கண்டேயன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி காளிதாஸ், புதூர் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதியதாக இணைந்த நிர்வாகிகள் மக்கள் நலப்பணிகளில் தங்களை அர்ப்பணிப்பதாகவும், திமுகவின் வளர்ச்சிக்காக உறுதியாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.