தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அணியாபரநல்லூரில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பொருட்கள் உற்பத்தி ஆலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனிமொழி கருணாநிதி அவர்கள், பால் உற்பத்தி திறனை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.