தூத்துக்குடியில் அதிமுக தொடர்பான தகவல்களை விரைந்து பெறுவதற்கான முயற்சிகளை தூத்துக்குடி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெறுவதற்கான முயற்சியாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் சேனலை தூத்துக்குடியில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார்.

இதில் நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.