தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மில்லர்புரம் பகுதியில் முன்பே நிறுவப்பட்டிருந்த உயர் மின் விளக்கு கோபுரத்தின் விளக்கை மாற்றி அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி மில்லர்புரம் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, தேவையான மின் விளக்கு மாற்றுப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.