திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட பல உபமின் நிலையப் பகுதிகளில் நாளை (11.11.2025 செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகளில் புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, வீரபாண்டியன்பட்டிணம், ராஜ்கண்ணா நகர், அமலிநகர், தோப்பூர், பாளை ரோடு, ஜெயந்திநகர், ராமசாமிபுரம், கானம், குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, நாலுமாவடி, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி, குளத்துகுடியிருப்பு, மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது “மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் புரிந்துணர்வு காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

முக்கிய அறிவுரை: மின்தடை நேரத்தில் மின்சாதனங்களை பாதுகாப்பாக அணைத்துவைத்து, தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.