விளாத்திகுளம் பேரூராட்சியில் ஆ. குமார் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக பொறுப்பேற்றார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றிய பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் ஆ. குமார் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவித்தார்.

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்றத் தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.