தூத்துக்குடி மாநகராட்சியின் கிழக்கு மண்டல குறைதீர்க்கும் கூட்டம் இன்று பழைய மாநகராட்சி வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையிலும் நடைபெற்றது.

உதவி ஆணையர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அவை அனைத்தும் உரிய பரிசீலனையில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.