தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(09.04.2025) காலை நடைபெற்ற எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் பிரச்சனை குறித்து மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சி ராஜ், தலைமையில் மாநகர மதிமுக கவுன்சிலர் ராமு அம்மாள் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.