தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட, ஜார்ஜ் ரோடு, தருவை மைதானம் எதிரில், தோமையார் கோவில் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

கோடை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மக்களோடு மக்களாய் மக்களுக்காக என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியாரின் ஆணையின்படி கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதல்படி, 40வது வார்டு கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, தற்காலிக நிழற்பந்தலை, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் 40 வது வார்டு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தற்காலிக நிழற் பந்தலை அமைத்துக் கொடுத்தார்.

40வது வார்டு பகுதி பொதுமக்கள் நேரடியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலை நேரடியாக சந்தித்து ரேஷன் கடையின் முகற்பு பகுதியில் தற்காலிக நிழற் பந்தலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.